மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?
கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்காக வரும் 17ம் தேதி டில்லி செல்கிறேன். அந்த கூட்டத்தை நடத்தியது த.வெ.க., அனுமதி கொடுத்தது போலீஸ். இதில் எனக்கு சம்மன் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின்போது, எல்லா அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதே முறையான நடவடிக்கையாக இருக்கும். இது பற்றி, 17ம் தேதிக்கு பின் பேசுகிறேன்.
மணல் திருட்டை தடுக்கப் போவதாகக் கூறி, போராட்டம் நடத்திய சிலர், தங்கள் வீட்டில் மணலை பதுக்கி வைத்துள்ளனர்.
- செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., - தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்