ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் விஜய பிரபாகரன்?
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றிருந்தது. விருதுநகர் தொகுதியில், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். வெற்றியின் விளிம்பை எட்டிய விஜய பிரபாகரன், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், கடைசி நேரத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
மாணிக்கம் தாகூர் வெற்றிக்காக உழைத்த தி.மு.க.,வுக்கு எதிராக, இப்போது அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் முன்வந்துள்ளார். தொகுதி பங்கீட்டு பேச்சில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக தெரிகிறது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -
Advertisement

வாசகர்கள் கருத்துகள்