Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மக்களை காக்க நீங்கள் தயாரா? பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி

மக்களை காக்க நீங்கள் தயாரா? பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி

சென்னை: 'மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கு மக்களை தயாராக இருக்க சொல்லும் முன், அவர்களை காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: 'கொரோனா ' தொற்றுக்கு தயாரானது போல, மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்' என, பிரதமர் கூறியுள்ளார். தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா; நாட்டு மக்களா?

போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் 'தாக்கங்களை உண ர்ந்து, அனைத்து பயன்பாடுகளுக்கான சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தங்களுக்கு நான் கடிதம் எழுதினேன்.

பொறுப்புள்ள மாநில அரசாக, 'தமிழகத்தில் உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் மின் அடுப்புகளை பயன்படுத்த, கூடுதல் மின்சார நுகர்வுக்கு யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் மானியம்' என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன். இந்திய மக்களை பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை கட்டுக்குள் உள்ளது



ஸ்டாலின் கேள்விக்கு பதிலடி கொடுத்து, தமிழக பா.ஜ., வெளியிட்ட அறிக்கை: மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், நாடு முழுதும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. ஈரான் அனுமதியோடு, ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில், 50,000 டன் சமையல் எரிவாயுவை, அர்ஜென்டினா அனுப்பியுள்ளது. போரை காரணம் காட்டி, வளர்ந்த நாடுகளே டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய நிலையில், பிரதமர் மோடி அரசு மட்டும் விலையை கட்டுக்குள் வைத்துள்ளது. தி.மு.க., அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை காட்டிலும், 28 சதவீதம் அதிகமாக, உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement