தி.மு.க., - மா.செ.,க்களுக்கு கல்தா? அதிரடி திட்டத்தில் ஸ்டாலின்!
- நமது நிருபர் -
தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு முடிவுக்கு பின், மாவட்ட செயலர்களிடம் ராஜினாமா கடிதம் பெற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய, 36 பேர் கொண்ட குழுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அக்குழுவினருக்கு, ஸ்டாலின் கூறிய அறிவுரைகள்:
ஒவ்வொருவரும் என் பிரதிநிதியாக செல்வதால், விருப்பு வெறுப்பின்றி, கட்சியினர் கூறும் உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் வரக் கூடாது. அதேபோல், யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
ஆலோசனை
தோல்விக்கான காரணமாக, என் மீதோ, என் குடும்பத்தினர் மீதோ புகார் தெரிவித்தாலும், மறைக்காமல் என்னிடம் தெரிவிக்க வேண்டும். நிர்வாகிகளின் உண்மையான உணர்வு என்ன என்பது எனக்குத் தேவை. கட்சியினர் குறை கூறும் நபர்களிடம், ஆய்வு பற்றிய எந்த தகவலையும் கூறக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆய்வு பணி குறித்து, அக்குழுவினரிடம், ஸ்டாலின் நேற்று கேட்டறிந்தார். பின், கட்சியின், துணை பொதுச்செயலர் கனிமொழி, இளைஞரணி செயலர் உதயநிதி, அமைப்புச் செயலர் பாரதி, முன்னாள் அமைச்சர் வேலு மற்றும் நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ராஜினாமா கடிதம்
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: அடுத்த மாதம் 3ம் தேதி, கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், மாநில அரசியலுக்கு கனிமொழியை கொண்டு வருவது குறித்தும், ஸ்டாலின் ஆலோசித்தார்.
தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு முடிந்த பின், தி.மு.க., மாவட்டச் செயலர்களை தனித்தனியாக அழைத்து, ஸ்டாலின் பேச உள்ளார்.
தி.மு.க.,வில், 30 ஆண்டுகளாக மாவட்ட செயலர்களாக உள்ளவர்களிடமும், தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்ட செயலர்களிடமும் ராஜினாமா கடிதங்களை பெற, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
தி.மு.க., - மா.செ.,க்களுக்கு கல்தா அதிரடி திட்டத்தில் ஸ்டாலின்.
எல்லார்கிட்டயும் ராஜினாமா கடிதம் வாங்குறது சரி தலைவர் எப்ப ராஜினாமா பண்ண போறாரு உதயநிதி எப்ப ராஜினாமா பண்ண போறாரு அப்புறம் கனிமொழி எப்ப முதல்ல குடும்பத்தில் உள்ள எல்லாரும் ராஜினாமா பண்ணுங்க அதுக்கப்புறம் கட்சி தொண்டர்கள் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் தானாகவே ராஜினாமா செய்வார்கள் சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான் தலைவர் எவ்வழியோ தொண்டர்களும் அப்படி முதல்ல பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிங்க
எல்லார்கிட்டயும் ராஜினாமா கடிதம் வாங்கி வீட்டுக்கு அனுப்பிட்டு, அப்புறம் திராவிட மாடல் கட்சில யாரு இருப்பாங்க. அதிகாரத்துல வேற இல்ல, அவனவன் விட்டது சனின்னு போய்கிட்டே இருப்பான். ஹி ஹி
ராஜினாமா கடிதம் வாங்குவது முக்கியமில்லை இரும்புக்கை கோப்பால் சார். அவர்கள் த.வெ.க சென்று விடுவார்களோ, பரவாயில்லையா?
ஏன் இரும்புக்கை கோப்பால் சார், திமுக வின் இந்தப் படுதோல்விக்கு கட்சி தலைவர், இளைஞர் அணி செயலாளர் இவர்களும்தானே பொறுப்பு. இவர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டியதுதானே?
முக்கிய தலைவர்க
எந்த கட்சியா இருந்தாலும்
வெற்றி பெரனும்
அதுதான். ஜனநாயகத்தின்
வெற்றி
நிச்சயம் இவரால் எந்த காலத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது.எலலாம் வாய்ச் சவடால் தான்
இவரையும் இவர் குடும்பத்தையும் முதலில் கட்சி விட்டு நீக்கினால் கட்சி உருப்படும் நாடும் உருப்படும்
நிர் வாசம் மோசம்
ஆனாலும் : ஸ்டாலின்
ஜெயித்து இருக்குணம்
தோல்விக்கு. சேகர் :

திமுகவில் 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக உள்ளவர்களிடம் தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்களிடமும் ராஜினாமா கடிதங்களை பெற ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் இதெல்லாம் சரி திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது ராஜினாமா செய்யப் போகிறார் இது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது காரணம் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கிளைச் செயலாளர் இவர்களெல்லாம் கடுமையாக கட்சிக்கு உழைத்தவர்கள் சொந்த காசு பணத்தை செலவு செய்தவர்கள் அதில் சில பேர் இதுவரை எந்த அரசு பதவியும் வகிக்கவில்லை பணம் காசு ஏதும் சம்பாதிக்கவில்லை இவர்களெல்லாம் திமுகவின் தொண்டர்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து எந்த பலனும் பெறாதவர்கள்
தோல்விக்கான காரணத்தை என் மீதோ என் குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்தால் மறைக்காமல் என்னிடம் தெரிவித்தால் உடனடியாக அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று உறுதி கூறியிருக்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை காரணம் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இளைஞரணி செயலாளர் உதயநிதி அமைப்பு செயலாளர் பாரதி முன்னாள் அமைச்சர்கள் வேலு மற்றும் பல நிர்வாகிகள் அவர்களிடம் முதலில் ராஜினாமா கடிதம் பெற வேண்டும் அப்போதுதான் கட்சி உருப்படும் வளர்ச்சி அடையும்.
திமுக இந்த தேர்தலில் தோல்வியை தலைவியதற்கு முக்கியமான காரணம் கட்சிக்குள் கொள்ளப் பக்கமாக வந்த ஸ்டாலின் கனிமொழி உதயநிதி தயாநிதி மாறன் மற்றும் பலர் இப்போது இந்த கருங்காலிகளை ஒழித்தால் திமுக அடுத்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது உங்கள் கையில் தான் உள்ளது.