மீண்டும் தி.மு.க., ஆட்சியா... அரசு ஊழியர் சம்பளம் 'கட்!'
ஹிமாச்சல பிரதேசத்தில், கடும் நிதி நெருக்கடியால் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்பட்டு உள்ளது. ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மை மிக மோசமாக இருந்தால், என்ன சீரழிவு நேரிடும் என்பதற்கு ஹிமாச்சல் தான் சான்று. அங்கு, ஆளும் காங்., அரசு, வருமானத்தை அதிகரிக்க எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், செலவை மட்டும் அதிகரித்ததன் விளைவு இது.
ஹிமாச்சலை விட மிக மோசமான நிலையில் தமிழக நிதிநிலை உள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையே கடன் வாங்கித்தான் தி.மு.க., அரசு வழங்கி வருகிறது. இதனால், தமிழகத்தின் நேரடிக்கடன் 9 லட்சத்து 52,374 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதம் வரை குறைக்கப்படும்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்