ஓட்டு எண்ணும்போது சிரிக்க கூடாது: தேர்தல் அலுவலர்களுக்கு அட்வைஸ்
கோவை: ஓட்டும் எண்ணும் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்படும். இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒவ்வொரு அலுவலரும் காலை முதல் மாலை வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சியில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனர் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் எங்கும் சோதனை ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. அதனால் கணக்கீட்டில் எந்த பிரச்னையும் வராது. ஓட்டு விபரங்களை எழுதும்போது எந்த பிழையும் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஆவணங்களில் ஏஜென்ட்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓட்டு எண்ணிக்கையில் ஏஜென்ட்கள் ஏதாவது ஆட்சேபனை செய்தால் விதிகள்படி தான் செயல்படுகிறோம் என்று அவர்களிடம் கையெழுத்து வாங்கியதை காட்டலாம்.
அங்கு வேறு ஏதாவது பிரச்னை எழுந்தால் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். ஓட்டுப்பதிவின்போதே கோவையில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல ஓட்டு எண்ணிக்கை பணியையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், இயந்திரத்தில் பட்டன் எதையாவது மாற்றி அமுக்கி விட்டோம் என்று பயந்துவிட வேண்டாம். உங்கள் முக பாவனை தான் முக்கியம். ஓட்டு எண்ணும் பணியில் சிரிப்பது, கோபப்படுவது, பதற்றப்படுவது போன்ற எந்த உணர்ச்சியும் அன்றைக்கு இருக்கக் கூடாது. பணியை முடித்தோமா வந்தோமா என்று இருக்கணும்.
எதுவுமே நடக்காதது போல் இருந்தால் சமாளித்து வெளியில் வந்துவிடலாம். ஏஜென்ட் யாராவது தெரிந்தவர் என்று கைக்காண்பித்தால் உங்கள் கதையுடன், தொகுதி தேர்தல் அலுவலரின் கதையும் முடிந்துவிடும். அங்கு உங்களின் உணர்ச்சியை வெளிப்படு த்தக் கூடாது, என்றார்.
Advertisement
கருத்து கணிப்பு முடிவு தி.மு.க விற்கு
சாதகம். விஜய் தன்னை ஒரு அழிவு சக்தி எனவும், தமிழின thuரோகியெனவும், சுயநல வாதி எனவும் ப்ரோவ் செய்த
உள்ளார்.அவரது கேரக்டர் nallathaiviru.bathaver..
அப்படியென்றால் அழுவதைத் தடுக்கவில்லை.தீயமுக வுக்கு வரும் ஓட்டுகளைப் பார்த்து ,அதற்கு ஓட்டுப்.போட்டவர்களை நினைத்து அழுது விடுங்கள்.
அது தான் முன் கணிப்பு என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்குதே! முழு முடிவுகள் தெரிந்த உடன் அழுகை நிச்சயம்!
எப்படிங்க அது முடியும் சாத்தியப்படுமா? திராவிட மாடல் 2.0 ன்னு சொல்லிட்டு கனவு கண்டுகொண்டிருக்கும் ஸ்டாலினை நினைக்கும்போது எப்படிங்க ஒட்டு எண்ணிக்கையின்போது சிரிக்காமல் இருக்க முடியும். எதுக்கும் ஒரு லிமிட் இருக்குங்க ..என்னால இந்த செய்தியை படிக்கும்போதே சிரிப்பை அடக்க முடியல . பாவம் ஒட்டு எண்ணிக்கையின்போது அவர்களின் பாடு திட்டடம்தான்
இப்படி meeting நடந்ததை public ஆக புதுவையில் செய்தி வெளியிட்டா agent கள் face reaction வச்சு ஓட்டு எண்ணும் அதிகாரங்களை பிரச்சினை பண்ண மாட்டாங்களா

மனிதனின் அடையாளம் சிரிப்பு.