தேர்தல் விதிமீறல்; சீமான் மீது வழக்கு
காரைக்குடி: தேர்தல் விதிகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், நேற்று ஓய்ந்தது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்குள் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, பிரசாரம் இறுதி நாளில் 6:05 மணிக்கு மேல் ஆகியும் சீமான், தனது பேச்சை முடிக்கவில்லை.
இதன் வாயிலாக அவர் தேர்தல் விதிகளை மீறியதாக, சீமான் மீதும், நா.த.க., நிர்வாகி ரவிச்சந்திரன் மீதும், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Advertisement
பணம் கொடுத்து ஒட்டு வாங்குபவர்களைக்கூட ஒன்றும் செய்யாத தேர்தல் ஆணையம் விதிகள் பற்றி பேசுவது வேடிக்கையானது...

பல பகுதிகளில் ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடாவை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை தான் தண்டிக்க வேண்டும்.