Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வாங்கிய காசுக்கு அளவாக கூவுங்கள்: கமலுக்கு அண்ணாமலை 'அட்வைஸ்'

வாங்கிய காசுக்கு அளவாக கூவுங்கள்: கமலுக்கு அண்ணாமலை 'அட்வைஸ்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவாரூர்: ''வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருவாரூரில் நேற்று, பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: திருவாரூர் தொகுதியில் கடந்த 1996ல் இருந்து 30 ஆண்டுகளாக தி.மு.க., வெற்றி பெற்று வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் கடைசிக்கு முந்திய இடத்தில் தான் திருவாரூர் மாவட்டம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நெல் கொள்முதலில் திருவாரூர் இரண்டாவது இடத்தில் இருந்தது; தற்போது 10வது இடத்தில் இருக்கிறது.

நெல்லை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. இதற்காக, மத்திய அரசு கொடுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால், நெல்லை மத்திய அரசு வாங்குவதில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். உர மானியமாக 29,132 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த உரத்தைக்கூட விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை.

மத்திய அரசு, நெல் குவின்டாலுக்கு 2,369 ரூபாய் உயர்த்தி கொடுத்தது. இத்துடன் 105 ரூபாய் சேர்த்து கொடுத்து, 2,500 ரூபாய் வழங்கியதாக தி.மு.க., அரசு கூறி வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பிரதமர் மோடியுடையது. மஞ்சப் பை தான் ஸ்டாலினுடையது.
கோவில் வளர்ச்சிக்கான மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தில், திருவாரூருக்காக தி.மு.க., அரசு 1 ரூபாய் கூட பெறவில்லை. திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தை அசுத்தமாக வைத்துள்ளனர். இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனை விட, அமைச்சர் சேகர்பாபு அதிக குடமுழுக்கு செய்திருப்பதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார். வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும்.
திருவாரூரில் எதிரணி சார்பாக போட்டியிடும் கலைவாணன் மீது கொலை வழக்குகள் உள்ளன. கலைவாணன் அண்ணன் மகன் கலைவேந்தன் மீது, தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் உள்ளன. நன்னிலத்தில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் முபாரக், கொரோனா காலத்தில் போலி மருந்தில் அரசு எம்பளத்தை போட்டு விற்றவர்.
கடந்த 2023ல் திருபுவனம் ராமலிங்கம் கொலையில், நேரடி தொடர்பு காரணமாக, முபாரக் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்தியது. அவருக்கு ஒரு ஓட்டு போட்டாலும், அது இந்திய இறையாண்மைக்கு எதிராக போடப்படும் ஓட்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

ஏப் 21, 2026 09:12 am

MLA சீட் கேடடைக்கல

Reply Rate this
ஏப் 20, 2026 08:58 pm

அய்யோ பாவம் கமல்

Reply Rate this
ஏப் 20, 2026 08:57 pm

பாவம் கமல் இத்தோடு கதம் கதம் தான்...

Reply Rate this
ஏப் 20, 2026 12:59 pm

திருவாரூர் வேட்பாளர் திமுக அவர் மீது பல வழக்குகளும் கட்டப்பஞ்சத்து வழக்குகளும் உள்ளது

Reply Rate this
ஏப் 20, 2026 11:24 am

மாநில தலைவர் பதிவையை பறித்த பழனிச்சாமி அவர்களுக்கு நீங்கள் கூவாத கூவா எல்லாம் பயம் தான் காரணமா.

Reply Rate this
ஏப் 20, 2026 10:43 am

அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி இருக்கிறது வாயும் வயிறும் பற்றி எரிபவர்கள் ஏகடியம் பேசி பதிவிட்டு திரிகின்றனர்

Reply Rate this
ஏப் 20, 2026 10:31 am

அது ஒண்ணுமில்ல காலையில பல்விளக்கும் போது கண்ணாடியை பார்த்து அண்ணாமலை அவருக்கு அவரே சொல்லிக்கிட்டதுதான் ??
வாங்கிய காசுக்கு அளவா கூவனும்கிறது ...??
கமலுக்கு காசு பணம் புகழ் அதிகாரம் என எல்லாமே தேவையான அளவுக்கு இருக்கிறது
அறிவு முதிர்ச்சியற்ற இவர்தான் இந்த காசு , பணம் , பதவி, அதிகாரம் மீதெல்லாம் மோகம் கொண்டு கூவி திரிந்து கொண்டு அலைகிறார் என மக்கள் பேசி கொள்கிறார்கள்.

Reply Rate this
Raman - Chennai
200 stuff.. typical
ஏப் 20, 2026 04:50 pm
Rate this
ஏப் 20, 2026 10:25 am

இவருக்கு கொடுத்த காசை இவர் வாங்கி அமுக்கி, மற்றோரை குறை சொல்வதுதான் இவர் அரசியல், செயலில் இல்லை, அதான் பாஜகவே இவரை அமுக்கிவிடாது, எனா ஒரு துண்டைப்போட்டு முட்டாக்குப்போட முடியாமல் எதோ கூவுகிறார்.

Reply Rate this
ஏப் 20, 2026 10:24 am

திராவிட மாடலின் சித்தாந்தங்கள்:

கொசு, சனாதனதர்மத்தைவிட உயர்ந்தது
சேகர்பாபு, ராஜராஜசோழனைவிட உயர்ந்தவர்

Reply Rate this
ஏப் 20, 2026 10:01 am

இவரே தன் வாய வாடகைக்கு விட்டு பிழைக்கிறார்

Reply Rate this