39 ஆண்டுகளுக்கு பின் பிராமண சமுதாயத்தவருக்கு மந்திரி பதவி
சென்னை: தமிழகத்தில், 39 ஆண்டுகளுக்கு பின், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடரமணன், அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக முதல்வராக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அவர்களில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வென்ற வெங்கடரமணன் ஒருவர்.
கடந்த 1952ல் நடந்த, முதல் சட்டசபை தேர்தலில், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாஜி முதல்வரானார். கடந்த 1954ல் காமராஜர் முதல்வரான போது, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.
அடுத்து, 1967ல் இருந்து தி.மு.க., அரசில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கடந்த 1977 முதல் 1987 வரை, எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் பிராமண சமுதா யத்தைச் சேர்ந்த எச்.வி.ஹண்டே, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 1991ல் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வரானார். ஆனால், அவரது அமைச்சரவையில் பிராமணர்கள் இடம் பெறவில்லை. 1987க்கு பின், அதாவது, 39 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசில், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடரமணன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
டாக்டர் ஹண்டே ஒரு பிராமணர். MGR மந்திரி சபையில் சுகாதார மந்திரியாய் இருந்தார்.
Dr. H. V. HANDE was a Brahmin, and he was the Health Minister in MGR பெரிஒது.
டாக்டர் ஹ. வ. ஹண்டே ஒரு பிராமணர். எம் ஜி ஆர் காலத்தில் ஹண்டே சுகாதார மந்திரியாய் இருந்தார்.
1). ஜோஸப் விஜய் அவர்களின் சினிமா கணக்கு வழக்குகளை பார்க்க உதவி செய்தவர் என்று கேள்விப்பட்டோம்.
2). சினிமா வருமானம், வெளிநாட்டு கார் வாங்குவது போன்ற டேக்ஸ் சம்பததப்பட்ட விஷயங்களில் உறுதுணையாக இருந்து இருப்பார்.
3). அரசியலிலும் அந்த மிமிக்ரி வேலை செய்ய ஆள் தேவைப்படும் என்பதால் MLA ஆக ஆக்கபட்டு இருக்கலாம்.
இது நவீன தீண்டாமை. ப்ராஹ்மணர்களை கேலி செய்வதும், திட்டுவதும், அவர்கள் மேல் அபாண்டமான பழி சுமத்துவதும் போலி மதசார்பின்மை கபோடிகளின் அன்றாட வாடிக்கையாகி விட்டது
இப்ப இந்த மாதிரி ஒரு ஆராய்ச்சி தேவையா ?? ஊடகங்கள் சற்று பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ளலாம். எவ்வளவோ ஆக்க பூர்வமான விஷயங்கள் உள்ளன . அது தொடர்பாக உங்கள் அறிவார்ந்த மூளையை கசக்கி கொஞ்சம் எடுத்து விடுங்கள் .
முதல் மந்திரியும் மந்திரி தான். அதனால் 10 வருடங்களுக்கு பின் தான் ஒரு பிராமணர் மந்திரி ஆகி இருக்கிறார். எங்கள் சமுதாயம் பல தொகுதிகளிலும் எம்எல்ஏ பதவியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது. எனினும் எங்களுடையது உள்பட பல சமுதாயங்களில் இருந்தும் இதுவரை மந்திரிகள் நியமிக்கப்படவில்லை.
ஊடகங்களுக்கு சிண்டு முடியும் வேலை தான். உடனே ஸ்டாலின் கீ கொடுக்க பொம்மையய்களான கம்மிசும் திருட்டு மாவும் ஆரம்பித்து விடுவார்கள் சமூக நீதி எங்கெ என்று. காங்கிரஸ்ஸுகளும் தாளம் தட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

அரசியல் என்று வந்துவிட்டால் அங்கேதான் குழப்பம் அவர்கள் தேவையில்லை ஏனென்றால் அந்தணர்கள் அவர்களுக்கு அப்போதைக்கப்போது தகுந்த அறிவுரை கூறுவார்கள் தவறுகளை சுட்டி காட்டுவார்கள் நம்பிக்கை துரோகம் செய்ய தங்குவார்கள் அவர்களை அவமரியாதை செய்து விட்டால் அவர்களே விலகி சென்றுவிடுவார்கள் அதற்காக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள்