இளைஞர்களை ஓட்டு போட விடாமல் தடுத்த போலீசார்: த.வெ.க., புகார்
சென்னை: த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வரும் இளைஞர்களையும், பெண்களையும், காவல் துறையினர் தடுத்ததாக, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
தேர்தல் கமிஷனுக்கு, அவர் அனுப்பிய புகார் மனு: ஓட்டுச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், மதியம் 12:00 மணி முதல், த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வரும் இளைஞர்களையும், பெண்களையும் தடுத்துள்ளனர். காவல் துறையின் இந்த அத்துமீறிய நடத்தையை எதிர்த்து, எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது,இளம் வாக்காளர்கள் ஓட்டு போடுவதை தடுக்க, சென்னையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
ஆட்சியை இழக்கும் நிலையை அறிந்து கொண்டதால், முதல்வர் ஸ்டாலினின் நேரடித் துாண்டுதலில், காவல் அதிகாரிகள் கடைசி முயற்சியாக, இந்த ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Please consider enabling online voting using an OTP sent to registered mobile numbers, along with a confirmation message after the vote is . This could help reduce expenses, violence, the need for large numbers of duty officers and police, and transportation challenges. Only a limited number of physical centers would be needed for people who do not have access to computers or similar facilities.
ஏன் இளைஞர்கள் எங்குமே வாக்கே அளிக்கவில்லையா? காவலர்கள் தடுத்தார்கள் என்றால் எப்படித் தடுத்தார்கள்? எதாவது ரூமுக்குள் வைத்து மாலை 6 வரை இளைஞர்களை பூட்டி வைத்து விட்டார்களா? இல்லை புள்ளை பிடிப்பவர்கள் போல் சாக்கு மூட்டைக்குள் இளைஞர்களை கட்டி தூக்கிச் சென்று விட்டார்களா? ஒரு அளவோடு ஆதவ் அர்ஜுனா புளுகனும். ஏக்கர் கணக்கில எல்லாம் புளுகக் கூடாது.
இவருடைய நாக்கு ரொம்ப நீளம் .அரசியல் நாகரீகம் இல்லாமல் மூன்றாம் தர பேச்சாளர்ப்போல முதல்வரை தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார் . தேர்தலை நினைத்து நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள் இவருக்கு பயந்து அல்ல . TVK வெற்றிபெற்றால் மட்டுமே இனிமேல் தான்தோன்றி தனமாக பேச முடியும் . இவர்பேசிய பேச்சுகளுக்கு DMK ஆட்சிக்கு வந்தால் இதுவரைக்கும் பேசியதற்கு பிறகு பேசுவதற்கும் கண்டிப்பாக அனுபவிக்கும் நிலை ஏற்படும்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
அது எப்படி வந்த இளைஞர்கள் த வெ க விற்கு ஓட்டு போட வந்தார்கள் என்று போலீஸ் க்கு தெரியும்
அப்பா முடியலடா சாமி இந்த கொசு தொல்லைக்கு ஒரே அளவே இல்லாம போயிட்டு இருக்கு

சினிமா கவர்ச்சி இல்லாத அரசியல் முதிர்ச்சி இளைஞர்களுக்கு தேவை. அது இல்லை. சினிமா நடிகருக்கு பின்னால் போய் காலை உடைத்து கொண்ட ஒருவன், இப்போது மருத்துவ செலவுக்காக மக்கள் பண உதவியை நாடும் நிலைமை உள்ளது.
அதே போல பணம் அதிகம் உள்ள சிலர் வருமான வரி கட்டாமல், தனது கருப்பு பணத்தை அரசியல் அதிகாரம் மூலம் காக்க, போடும் கூடும் கூட்டணி தமிழ்நாட்டில் புதிதாக முளைக்கிறது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இது ஏமாற்று வேலை என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.