சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் சந்திப்பு
சென்னை: தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் குறைவாக இருந்த போதும், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர இருக்கிறார்.
இதற்கிடையே மே 7ம் தேதி அவர் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான பிரமாண்ட விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்த வருகிறது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். தற்காலிக சபாநாயகரை தேர்ந்தெடுப்பது குறித்து செங்கோட்டைன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
Advertisement
அதிமுகவில் பெருந்தலைகள் அனைத்தும் ஒழியட்டும் இன்னும் சொல்லப்போனால் அனைத்து துரோகிகளும் ஒழிந்து எந்தக் கொள்கைக்காக எம்ஜிஆர் அவர்கள் கட்சியை தொடங்கினாரோ அந்த தீய சக்தி ஒழிக்கமீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆசியோடு மீண்டும் கட்சி புது பொலிவுடன் மீண்டும் மலரட்டும் இதுதான் அதிமுக தொண்டனின் மனக்குமுறல்
அனேகமாக செங்கோட்டையன் தற்காலிக சபாநாயகராக வர வாய்ப்பு உள்ளது.ஓட்டெடுப்பின் போது நடக்கும் உள்ளடி வேலைகளை சமாளிக்க அவரது அனுபவம் கை கொடுக்கும்.

பாவம் யா அந்த கட்சி 108ல் பத்து பேர் தவிர மற்ற யாருக்கும் சட்ட சபை எப்படி இருக்கும் விதி முறை என்ன என்று கூட தெரியாது