ஆட்சி அமைக்க விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு!
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றன. இதனால் 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்ததால், திமுகவுடன் 2016ம் ஆண்டு முதல் தொடரும் அந்த கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது.
Advertisement
2029 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்கும் தைரியம் விஜய்க்கு கிடையாதே
நீண்ட காலம் தங்களுடன் இருந்த கூட்டணி கட்சிகளை சரிவர மதிக்காத திமுக அதன் பலன் இது.
ராகுல் தன் கட்சியை அகல பாதாளத்தில் தள்ளியவர். சந்தர்ப்பவாதி. அடுத்த தேர்தலிலே திமுக வெற்றி சாத்யமாவது போல் இருந்தால் அங்கு போய் மீண்டும் ஒட்டிக்கொள்வார். தவெக அதிமுக மைனஸ் பாஜகவுடன் போவதுதான் சரியானதாக இருக்கும்
Wisdom dawns late Anyway better late than never. இப்பவாவது கூடா நட்பு கேடாய் முடியும் என்று ஞானோதயம் வந்ததே அதுவே மகிஷ்ச்சி
மோடி அமித்ஷா வந்து வந்து வோட்டு கேட்டும் வெறும் ஒரே ஒரு MLA அனால் காங்கிரஸ் தலை பப்பு வாராமலே தீய சக்தி DMK தயாவால் காங்கிரஸ் க்கு 5 MLA அந்த தீய சக்தி வோட்டு தான் இப்போ TVK வை காப்பாற்ற போகுது ,ஆகவே DMK இன்றி ஒரு அசைவு தமிழ்நாட்டில் இல்லை
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் போலீஸ் காரன் எட்டி பாத்தானு மதிய அரசையே கவுதவங்கதான் காங்கிரஸ்

இனி உங்களின் பி.எம் கனவு மண்ணோடு ஆகிவிட்டது.