முதல்வருக்கு ஏதோ ஆகிவிட்டது
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைத்ததும், முதல்வர் ஸ்டாலின், பயம் மற்றும் பதற்றமடைந்துள்ளார். தன்னிலை மறந்து பேசி வருகிறார்.
தி.மு.க., கூட்டணியில் உள்ள சில கட்சிகளை, எங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என, முதல்வர் சர்வாதிகாரமாக செயல்பட்டுள்ளார். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் யாரையும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை.
தமிழகத்தில் தற்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கும் டில்லிக்கும் என்ன சம்பந்தம்? டில்லிக்கும் தமிழகத்துக்கும் தான் போட்டி என முதல்வர் கூறுவது விதண்டாவாதம். அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. தி.மு.க.. மற்றும் கூட்டணி கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம்.
-- கடம்பூர் ராஜு முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்