கரூர் 'எலி'க்கு கோவையில் 'பொறி': அண்ணாமலை பிரசாரத்தில் 'தெறி'
கோவை : ''சட்ட சபை தேர்தலில் திமுகவின் முதல் தோல்வி கோவை தெற்கில் ஆரம்பித்து கோவை வடக்கு என சேப்பாக்கம் வரை செல்லும்,'' என, பாஜ அண்ணாமலை பேசினார்.
கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கண்ணப்ப நகரில் பாஜ அண்ணாமலை பேசியதாவது: திமுக ஆட்சியை துாக்கி எறிய மக்கள் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணியின் அலை வீசுகிறது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 கற்பழிப்பு சம்பவங்கள், 18 ஆயிரம் 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடந்துகொண்டிருக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டிருந்தார். அந்த இரும்புக்கரம் துருப்பிடித்து நிற்கிறது. செந்தில் பாலாஜி என்ற 'எலி' கோவை பொறியில் மாட்டியுள்ளது.நாட்டில் 1977க்கு பின், ஒரு கட்சி தனித்தன்மையுடன் ஆறு முறைக்கு மேல் ஆட்சி அமைத்துள்ளது என்றால், அது அதிமுகதான். இது, அதிமுகவின் கோட்டை. தேஜ கூட்டணி பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
திமுகவின் ஊழல் பட்டியல் காங்., கட்சியிடம் உள்ளது. அதனால் காங்., பற்றி திமுகவினர் பேச மாட்டார்கள். பாஜ - அதிமுக ஆகிய இரண்டுமே எளிமையான கட்சி. சாமானிய மனிதர்களும் தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்பது, தேஜ கூட்டணியின் அடிப்படை தத்துவம். கருணாநிதி முதல்வரானவுடன், நாடு முழுவதும் சுரண்டி அவரது குடும்பத்துக்கு நான்காவது தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களை சேர்ந்துள்ளார். அண்ணா என்கிற வார்த்தையை திமுக கட்சியினர் பயன்படுத்தவே கூடாது.
எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, செந்தில் பாலாஜியை தமிழகத்தின் ஊழல்பேர்வழி என்றார். இன்று, அருமை சகோதரர் என்கிறார்; காரணம் பெட்டி மாறியுள்ளது. திமுக வேட்பாளர்கள் 'டெபாசிட்'கூட இங்கு வாங்கக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement
சிலரது கருத்துக்களின்படி, நல்லவர்களை தேர்ந்தெடுக்க உரிய நேரம் இது.
தமிழக தேர்தல் முடிவுகள் அண்ணாமலைக்கு நிச்சயமாக வெறி பிடிக்க வைத்து விடும்!
கரூர் எலிகளுக்கு கோவையின் பொறி அப்ப அண்ணாமலை எந்த ஊர் எலி அவரு கரூர் எலி தானே நாகரிகமா பேசுங்க அண்ணாமலை சார் ஏடிஎம்கே ஏதாவது சாதனை பண்ணி இருந்தா அந்த சாதனையை சொல்லுங்க பிஜேபி தமிழ்நாட்டுக்கு ஏதாவது சாதனை பண்ணி இருந்தா அத சொல்லி ஓட்டு கேளுங்க அதை விட்டு போட்டு அது பிரிஞ்சிடுவாங்க இது பெருஞ்சுருவாங்க அவங்க எழுதி வச்சிருக்காங்க எங்க பொறி வச்சிருக்காங்க நடைமுறைக்கு என்ன தேவையோ அத பேசுங்க அண்ணாமலை என நடைமுறைக்கு நீங்க தேவையே இல்லை அதனால் தான் இப்படி பேசுறீங்க
விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த “எலி... பொறி”...ங்ற வார்த்தைகள்...? ஆனால்... நீ எங்கே போனாலும் பின்னாலேயே உன்ன விரட்டிகிட்ட வர செந்தில்பாலாஜி பெரிய ஆளுதான்யா...?

தேர்தல் முடிந்த பிறகு தன் தலைவரோடு கட்சியை அங்கு நடத்த வேண்டும்.