Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் மனு தள்ளுபடி

 பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் மனு தள்ளுபடி

சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக மனு தாக்கல் செய்த, த.வெ.க., வேட்பாளரின் மனுவும், மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடியானது. அவர்கள், அ.தி.மு.க.,விடம் விலை போய் விட்டதாக, த.வெ.க.,வினர் கொந்தளித்துள்ளனர்.

இடைப்பாடியில், த.வெ.க., வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா மனுதாக்கல் செய்து இருந்தார்.

கடத்தல் மனுக்கள் மீதான பரிசீலனை, நேற்று மாலை 3:30 மணிக்கு நடந்த போது, அருண்குமார் வரவில்லை. மொபைல் போனையும் ஆப் செய்து விட்டார்.

இதனால், அருண் குமாரை கடத்தி விட்டதாக , சேலம் த.வெ.க., மேற்கு மாவட்ட செயலர் செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே, அருண்குமார் வேட்பு மனுவில், இடைப்பாடி தொகுதி வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிவதற்கு பதில் எட்டு பேர் மட்டுமே கையெழுத்திட்டிருந்ததால், அது தள்ளுபடியானது. அவரது மனைவி நித்யா மனுவிலும் ஏழு பேர் மட்டுமே கையெழுத்திட்டிருந்ததால், அந்த மனுவும் தள்ளுபடியானது.

த.வெ.க.,வினர் கூறுகையில், 'வேட்புமனு தள்ளு படியாக வேண்டும் என்ற நோக்கத்துடன், போதிய விபரம் இல்லாமல் மனுதாக்கல் செய்துள்ளார்.

'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர் என்பதால், அ.தி.மு.க., பொதுச்செயலரும் இடைப்பாடி வேட்பாளருமான பழனிசாமிக்கு ஆதரவாக, விலைபோய் விட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது' என்றனர்.

அ.தி.மு.க.,காரர் த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், கடந்த 2025 அக்டோபர் வரை, அ.தி.மு.க.,வில், அயோத்தியா பட்டணம் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர்.

மேலும், 2019 முதல் 2024 வரை அயோத்தியா பட்டணம் அ.தி.மு.க., ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்தவர். செங்கோட்டையன் வாயிலாக, அ.தி.மு.க.,வுக்கு வந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., வேட்பாளர் மனுவில் சர்ச்சை: இன்று வழக்கு


இடைப்பாடி தொகுதி தி.மு.க., வேட்பாளராக காசி, மாற்று வேட்பாளராக அவரது மனைவி அமுதா மனு தாக்கல் செய்தனர். காசியின் மனுவில், அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் அமுதாவும், அமுதா மனுவில், அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் காசியும் கையெழுத்திட்டிருந்தனர். இதனால் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டது. மனு பரிசீலனை தள்ளி வைக்கப்பட்டது.
இதையறிந்த சேலம் தி.மு.க., - எம்.பி., செல்வ கணபதி, மனு பரிசீலனை அறைக்கு வந்து, தேர்தல் அலுவலர்களிடம் பேசியதால், தி.மு.க., வேட்பாளர் காசியின் மனு ஏற்கப்பட்டது. இதை எதிர்த்து, அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், காசி வேட்பு மனு ஏற்கப் பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் இன்று வழக்கு தொடர இருப்பதாக, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement