விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்; சொல்கிறார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
மதுரை: சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; விஜய் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபர். அவருடைய பேரணிகளிலும், மற்ற இடங்களிலும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் திரண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதன் காரணமாக அவர் பெரிய தாக்கத்தை நிகழ்த்துவார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பகத்தன்மையை இழந்து விட்டார். மோடியும், அமித் ஷாவும் பழி வாங்கும் நோக்கில் திமுகவின் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். இது விஜய்க்கு அதிமுக ஓட்டுகளையும் பெற உதவுகிறது, இவ்வாறு அவர் கூறினார்..
Advertisement
அப்படி ஏற்பட்டால் தமிழ் நாட்டிற்கு தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு
காங்கிரசில் காலை வைத்துக்கொண்டு தலையை மட்டும் த.வே காவில் புகுத்தி இருக்கும் இவரை என்ன என்று சொல்வது
கூவு 2029 தேர்தலில் இத்தாலியின் பப்பு கட்சியை ஓடவிட்டு திமுக தன் வேலையை காட்டும் தனக்கு நண்பனாக உண்மையாக கூட்டணியில் உள்ளவரை இவனுக தலையில் வைத்து கொண்டாடுவானுகள் தனக்கு எதிராக திரும்பினால் விஜயகாந்த் கமல் போல தனக்கு கீழே அடிமையாக்கி காணாமல் போக செய்துவிடுவானுகள் 2029ல் பப்புவுக்கு பெப்பேதான்
கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி இப்போது கண்ணுக்கு தெரியாத வைரஸ் அளவு தேய்ந்து காணாமல் அழிந்து வரும் கட்சி இந்த மாதிரி சில புல்லருவிகளால் இனி ஏன்டி வைரஸால் நிரந்தரமாக அழிந்துவிடும் பணையூர் பண்ணையார் கட்சி மே 4 முதல் மண்டையில் முக்காடு போட்டுகிட்டு அவனவன் தாய் கழகத்திற்கே பறந்து போய் விடுவானுகள் 2029 தேர்தலில் இந்த புல்லுருவியெல்லாம் காணமல் போய் விடுவான் ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்பிக்களுடன் கூட்டணியில் பெரும்பாலான பலம் கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே இதையும் இப்போது பகைத்து கொண்டாடிவிட்டது
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வாக்குகள் தவெக பக்கம் சென்று இருக்கும் போல் தான் தெரிகிறது.

நீங்கள் எல்லாம் கட்சிக்காரன் என்று வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வெளியே வராதீர்கள்.