Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பங்களாவை உடனே ஒப்படைக்க முடியாது: முன்னாள் அமைச்சர்கள் தடாலடி

பங்களாவை உடனே ஒப்படைக்க முடியாது: முன்னாள் அமைச்சர்கள் தடாலடி

சென்னை: 'அரசு பங்களாக்களை, உங்கள் இஷ்டப்படி ஒப்படைக்க முடியாது' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், முன்னாள் அமைச்சர்கள் தடாலடியாக கூறியுள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் தங்குவதற்காக 60 பங்களாக்கள் உள்ளன. இவற்றில் அமைச்சர்களின் அலுவலகம், குடியிருப்பு, பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை உள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் 23க்கும் அதிகமான அமைச்சர்கள், இந்த பங்களாக்களை பயன்படுத்தி வந்தனர். தங்கள் சொந்த செலவில், கட்டில், மெத்தை, பிரிஜ், டிவி, ஏசி உள்ளிட்ட வசதிகளை, அமைச்சர்களின் குடும்பத்தினர் செய்து கொண்டனர்.

தோட்டங்களில் நாட்டுக்கோழி, பசுக்கள், பறவைகள், வெளிநாட்டு நாய்களை சில அமைச்சர்களின் குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். இந்த அரசு பங்களாக்கள், பொதுப்பணித்துறையினர் பராமரிப்பில் உள்ளன.

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால், தி.மு.க., ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு, பங்களாக்களை ஒதுக்க வேண்டியுள்ளது. எனவே, பங்களாக்களில் பெயின்ட் அடித்தல், கழிப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டனர்.

அதற்காக, பங்களாக்களை காலி செய்யும்படி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகர் வாயிலாக, முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, துணை முதல்வர் பதவி இழந்த உதயநிதி ஆகியோரின் உதவியாளர்களுக்கும் இந்த உத்தரவு பறந்துள்ளது. இதை ஏற்று, பங்களாக்களை அனைவரும் காலி செய்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை, நேரடியாக நேற்று அழைத்து பேசிய ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், இரண்டு மாதத்திற்கு பிறகே, பங்களாக்களை காலி செய்ய முடியும் என தடாலடியாக கூறியுள்ளனர்.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பங்களாக்களை காலி செய்வதற்கு இரண்டு மாதங்கள் வரை அவகாசம் வழங்குவது வழக்கம். ஆனால், உடனடியாக பங்களாவை காலி செய்யும்படி கூறியதால், முன்னாள் அமைச்சர்கள் கடும் கோபம் அடைந்து உள்ளனர்.

மேலும், அறைகளில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால், அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, இரண்டு மாதங்கள் வரை பங்களா பக்கம் வந்து காலி செய்யும்படி தொல்லை செய்ய வேண்டாம் என தடாலடியாக கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை, முன்னாள் அமைச்சர்கள் குடும்பத்தினர் அனுப்பி வைத்து உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Advertisement

மே 08, 2026 03:06 pm

கஷ்டப்பட்டு திருடி சேர்த்த விலை உயர்ந்த பொருட்களை வேறு யாரும் திருடு விடாமல் பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டாமா? அதற்கு இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் கொடுங்கள்

Reply Rate this
மே 08, 2026 11:54 am

Mind your words

Reply Rate this
Sathyan - Chennai
When these ex ministers were sworn in as ministers, they were allotted the bungalows on time. So these people should have the basic courtesy to vacate and hand over for preparing for the new ministers. At the end of the day, the costs are borne from taxpayer money
மே 09, 2026 09:30 pm
Rate this
மே 08, 2026 11:13 am

வேறு அரசு பதவிக்கு வரும் வரை குடியிருக்கட்டும். ஆனா அதுவரை கட்டாயம் நியாயமான மார்க்கெட் வாடகை செலுத்த வேண்டும்.

Reply Rate this

அரசு சொத்தை ஒப்படைக்க முடியாது என்பது ஆணவமான பேச்சு. அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் ஒப்படைக்கவில்லையெனில் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கக்கன் போன்று எளிய வாழ்க்கை வாழ்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு மத்தியில் இவர்களுக்கு சொகுசு வாழ்க்கை மக்கள் பணத்தில். இது முதலில் ஒழிக்கப்பட வேண்டும். விஜய் முதல்வர் ஆன பின் முதலில் மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் மக்கள் சேவகர்கள் என்பதை உறுதிப்படுத்தி நிலைநாட்ட வேண்டும். வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது. செயல் முக்கியம் பிகிலு.

Reply Rate this
மே 08, 2026 10:53 am

வாட்டர் லைன் மற்றும் கழிவு நீர் கனெக்ஷனை கட் செய்துடுங்க

Reply Rate this
மே 08, 2026 10:28 am

வீட்டில் குடி இருப்பவர்களிடம் கூட கால அவகாசம் கொடுக்க வேண்டும். உடனே எப்படி காலி செய்வார்கள்? அதுவும் இவர்கள் அரசியல்வாதிகள்

Reply Rate this
மே 08, 2026 10:22 am

இந்த முன்னாள்கள் அரசே அவர்களுக்கு வேறு தகுந்த வீட்டு வசதிகள் ஏற்பாடு செய்து அந்த வீடுகளின் வாடகையை ஏற்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.
முதலில் இவர்களுக்கு அளிக்கப் படும் பென்ஷன் மற்றும் இலவச மருத்துவ வசதி தனியார் கார்பரேட் மருத்துவ மனைகளில், போக்குவரத்து சலுகைகளை உடனே நிறுத்த வேண்டும். 30 வருடம் அரசிலோ அல்லது தனியாரிடமோ வேலை பார்த்த ஊழியர்களுக்கு கூட இல்லாத சலுகைகளை எதற்கு இந்த முன்னாள்களுக்கு அரசு கொடுக்கவேண்டும். அவ்வளவு பஞ்ச பராரிகள் ஆகாவ இருக்கிறார்கள்.

Reply Rate this
மே 08, 2026 09:00 am

மின்சாரத்தையும் தண்ணீரையும் துண்டித்தால் தானாகவே வெளியேறி விடுவார்கள்

Reply Rate this
மே 08, 2026 08:19 am

ஒரு அதிகாரியே இப்படி பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் எப்படி பேசுவார்கள். இதுதான் திராவிட மாடல் பயிற்சி

Reply Rate this
மே 08, 2026 08:03 am

இவர்களுக்கு சொந்த வீடுகள் இருப்பதாகவும் தானே பிரமாண பாத்திரத்தில் சொல்லியிருப்பார்கள். வே ட்ப்பாளர்கள் 50% வீதத்திற்கு மேல் கோடீஸ்வரர்கள் என்றும் கூட சொல்லியிருக்கிறார்களே . ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் ஓரிரு மாதங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கலாம். அதன் பிறகு கண்டிப்புடன் வெளியேற்ற வேண்டும்.
நம் திமுக அமைச்சர் போல 10,000 ரூபாய் மட்டுமே வங்கியில் வைத்திருப்பவர்களை பாவம் பார்த்து விட்டு விடலாம்.

Reply Rate this