துணை முதல்வர் பதவி: விஜயிடம் பா.ம.க., பேரம்
சென்னை: த.வெ.க.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், பா.ம.க.,வுடன் நடந்த பேச்சில், துணை முதல்வர் பதவி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், 106 தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெற்றுள்ளது. இது, தனித்து ஆட்சி அமைக்க போதுமானது இல்லை. எனவே, கூட்டணி ஆட்சி அமைக்க, பா.ம.க., தலைவர் அன்புமணியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.,வுக்கு இன்னும் 12 இடங்கள் தேவை. இதில், காங்கிரஸ் கூட்டணிக்கு வர சம்மதித்து விட்டது; அது மட்டும் போதாது. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற, பா.ம.க.,வுடன் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால், துணை முதல்வர் பதவியை, தனது மனைவி சவுமியாவுக்காக, அக்கட்சியின் தலைவர் அன்பு மணி கேட்கிறார். அதேபோல், விஜய் ராஜினாமா செய்ய உள்ள, ஒரு தொகுதியையும் கேட்கிறார்.
வெறும் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று, இவ்வளவு பெரிய 'டிமாண்ட்'ஐ பா.ம.க., முன்வைப்பது, விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க.,வுடன் தீவிர பேச்சு நடந்து வருகிறது.
சென்னையில் நாளை எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து விட்டு, ஆட்சி அமைக்க கவர்னரிடம் விஜய் உரிமை கோர உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் எவ்வளவு நேரம் கொடுப்பார் என, தெரியவில்லை. அவர் கொடுக்கும் கால அவகாசத்துக்குள், ஆட்சிக்கு தேவையான ஆதரவை திரட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement
தீய சக்தியை TVK ஒழித்து கட்டணும் . இல்லை என்றால் மீண்டும் துளிர் விடும். அ.தி.மு.க., வை எடப்பாடி சீக்கிரமே காலி பண்ணிடுவார்.
அன்புமணி பக்கா ஊழல்வாதி. முன்பு மத்திய அமைச்சர் ஆக இருந்த போது, மருத்துவ கல்லூரிகளில் அடித்த கொள்ளை கோடிக்கணக்கில். வேண்டாம் வேண்டாம் அன்பு. மணி சாவு மணி அடித்து விடுவார்.
He should do an invitation to the winners asking for support with no tags attached considering the state mandate and to work for their constituents. No party labels attached with them
He should do an invitation for winnners to join him with no tags attached if they consider the people mandate and considering the welfare for their constituents
He should do an invitation for winnners to join him with no tags attached if they consider the people mandate and considering the welfare for their constituents
கடந்த 60 ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்தில், மது மற்றும் போதைப் பொருட்களை அனுமதித்து கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியது, ஊழலை வளர்த்து கோடிகளை வாரிக் குவித்தது, கடனாளி மாநிலமாக மாற்றியது. அதிலிருந்து விடுதலை கிடைக்கும் சூழலில், சிறிய கட்சிகளின் அதிகாரப் பசியோ அதை விட மோசமாக உள்ளது.
எனக்கென்னவோ பிரேமலதாவை ஆதரவு தரும்படி கேட்கலாம். அவரும் உடனடியாக கொடுத்துவிடுவார். ஆனால், ஒரே ஒரு சிக்கல், அவர் முதலமைச்சர் பதவி மட்டும் கேட்பார்.
யாரை அரசில் இணைந்தாலும் திராவிடகட்சிகளை மட்டும் இணைக்காதீங்க. அப்புறம் அரசியலுக்கு வந்ததுக்கவே பொருள் இல்லாமல் ஆகி விடும். மக்களிடம் எதிர்ப்பு வந்து தவறை சிந்திக்க நேரிடும்.

திராவிட கட்சிகள் வேண்டாம் என்று சொல்லும் விஜய் திராவிட சித்தாந்தம் உள்ளவர் என்பது நல்லாவே தெரியும் பெரியார் ஆதரவு நிலை இதெல்லாம்