தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்
நமது நிருபர்
தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, கோவையில் இன்று(ஏப்.,18) பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் வரும், 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, கடந்த 15ம் தேதி நாகர்கோவிலில், 'ரோடு ஷோ' வாயிலாக பிரசாரம் செய்தார். இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்றார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவையில் இன்று மாலை பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில், பழனிசாமி உட்பட தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிர்த்திகாவை ஆதரித்து, நாளை பிரசாரம் செய்கிறார். நாளை மாலை, சென்னை மயிலாப்பூரில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, 'ரோடு ஷோ' வாயிலாக பிரசாரம் செய்கிறார்.
ராகுல் பிரசாரம்
தமிழகத்தில் இன்று ராகுல் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விபரம் பின்வருமாறு:
பொன்னேரி- முற்பகல் 11.30 மணி
சோளிங்கர்- மதியம் 1 மணி
துறையூர்- மாலை 3.30 மணி
Advertisement
இராகுல் ஏன் சம்பந்தமில்லாமல் பொன்னேரி துறையூர் என குறைந்த மக்கள் தொகை உள்ள இடங்களில் பரப்புரை செய்கிறார்?பிரதமர் நான்கு முறை வந்து வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என விரிவான இடங்களில் பரப்புரை.காங்கிரஸ் இந்த அளவு ஏன் மங்கியுள்ளது.சிந்தனை செய்ய ஒருவர் கூட இல்லையா?
மொத்தமாக திராவிடத்தை ஒழித்துக்கட்ட பிரதமர் முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.
இதில் இவர்களின் புரிந்துணர்வு கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்கேற்பாரா?
மகளிர் இடஒதுக்கீட்டையும் தொகுதி மறுசீரமைப்பையும் ஒன்றாக கலக்காதீர் ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாக கலக்காதீர் இது ஒன்று தான் நாட்டு மக்கள் உங்களிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள்

இன்று கோவை மாநாடு பிசுபிசுத்து விட்டது என்று நாளை செய்தி வரும்!