Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மேம்பட வேண்டும்: அண்ணாமலை

 தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மேம்பட வேண்டும்: அண்ணாமலை

கோவை: ''மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை தேர்தல் கமிஷன் சரியாக செயல்படுத்த தவறிவிட்டது,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை - கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் நேற்று ஓட்டளித்த பின், அவர் அளித்த பேட்டி: கடந்த 3 நாட்களாக கோவை தெற்கு உட்பட, கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்துள்ளது. ஒரு கிராம் தங்க தோடு கொடுத்துள்ளனர்; கோவில்களில் வைத்தும் பணம் கொடுத்துள்ளனர். இவற்றை கண்காணிக்க தேர்தல் கமிஷன் மேற்கொண்ட பணிகள் போதுமானதாக இல்லை.
கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், பண விநியோகத்தை எதிர்த்து போராட்டமே நடத்தியுள்ளார். பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தவறி விட்டது. தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் முன்பே, இதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சரியாக செயல்படுத்த தேர்தல் கமிஷன் தவறி விட்டது. அதன் செயல்பாடுகள் மேம்பட வேண்டும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜனநாயகம் தான் எப்போதும் வெற்றி பெறும்; பணம் எப்போதும் வெற்றி பெறாது.
நான், த.வெ.க., தலைவர் விஜய் 'காஸ்ட்யூமில்' வரவில்லை. வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் என, நான் ஏற்கனவே அணிவதுண்டு. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த 'காஸ்ட்யூமில்'தான் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ஏப் 24, 2026 07:27 am

இந்த நாட்டின் பிரதமரே சட்டத்தில் உள்ளவாறு நடக்காத போது மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள்.

Reply Rate this
ஏப் 24, 2026 06:50 am

இது சரியான கருத்தாக தெரியவில்லை .தேர்தல் கமிஷன் ஆல்லாளுக்கு ஒரு ஊழல்தடுப்பு அலுவலரை போடமுடியாது .கட்சிகள் விழிப்புடன்செயல்பட்டு எங்கெங்கு ஊழல் நடக்கின்றதோ அதை உடனுக்குடன் பறக்கும் படைக்கு தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடூரத்துவருகிறார்கள் .ஊழல்செய்தவர்களை சட்டத்தின்மூலம் தண்டனைக்குட்படுத்தும் நடவடிக்கையை கட்சிகள்தான் முன்னெடுத்து நடத்தவேண்டும்,தேர்தல் கமிஷன் நடவடிக்கைஎடுக்க வற்புறுத்திக்கண்காணிக்கவேண்டும் .

Reply Rate this
ஏப் 24, 2026 06:23 am

இவர் அரசியல்வியாதியாக மாறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அன்றே திரு பட்டுக் கோட்டை பாடியதுதான் இவருக்கான பதில்
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது"

உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா கொடுக்குற நோக்கம் வளராது வாங்க
அழைக்கிற மக்கள் இருக்கும்வரைக்கும் தவறுகளை ஆண்டவனாலும் மோடியே முயன்றாலும் குறைக்க முடியாது"
இந்தியா போன்ற மிகப் பெரிய குடியாட்சியில் இது போன்ற தேர்தல் திருவிழாவை நடத்துவது அத்தனை எளிதல்ல தேர்தல் ஆணையத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.
பாஜகவுக்கு "இதுவும் கூட மோடி அரசின் சாதனை" என்று சொல்லும் மனமில்லையே

Reply Rate this
ஏப் 24, 2026 05:12 am

ஆமாம், அடுத்த முறை இவர்களின் கூட்டணிக் கட்சியான திமுக கொடுக்க நினைக்கும் பணம், கூப்பன் இவை அனைத்தையும் தேர்தல் கமிஷனே வாங்கி டோர் டெலிவரி செய்ய வேண்டும்.

Reply Rate this