பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
நமது நிருபர்
பெரம்பூரில் இன்று (ஏப்ரல் 18) வீடு வீடாக சென்று விஜய் பிரசாரம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூரில், த.வெ.க., தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. விஜய், தேர்தல் பணிமனைக்கு நேற்று சென்று பார்வையிட்டார்; கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பணிமனை முன், பெண்களுடன் இணைந்து, தன் கட்சியின் 'விசில்' சின்னத்தை விஜய் கோலமாக போட்டார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) பெரம்பூரில் விஜய் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து, பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில், நாளை விஜய் பிரசாரம் செய்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, கிழக்கு தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் விஜய் சென்று ஓட்டு சேகரிக்க உள்ளார்.
Advertisement
75 வருஷம் அரசியல் தெரிஞ்ச அண்ணன் ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் மேல் ஒரு பாசம் இருக்கிறது. அதனால் தான் அவர் எது சொன்னாலும் ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிறார்.. குழந்தை மாதிரி நீ எனக்கு என நினைத்து ஸ்டாலின் சார் விட்டுவிட்டார் என நடிகை ஆர்த்தி திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார்.
1). ஜோஸ்ப் விஜய் என்று அவரது உண்மையான பெயரைச் சொன்னால் தான் அவரது குடும்பத்திற்கு பெறுமை சேர்க்கும்.
2). நிச்சியமாக ஜோஸப் விஜக்கு எதோ வெளியில் சொல்ல முடியாத நோய் உள்ளது போல் தோன்றுகிறது. மனிதரின் தோற்றம் மற்றும் நடை நோய் வாய்ப்பட்ட இறகு உதிர்ந்த பண்ணை கோழி போல் அமைந்துள்ளது.
3). தேர்தல் மற்றும் கட்சி நடத்த ஆகும் செலவுகள் வெளியில் உள்ள அமைப்புகள் பார்த்து கொள்ளுவதால் தனக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற எண்ணம் காரணமாக ஜோஸப் விஜய் இவ்வாறு நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஒட்டு கேட்ட்க கூட தொகுதி பக்கம் வர மாட்டான் சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு தொகுதி பக்கம் வருவான்
Special security யின் அறிவுரைக்கு ஏற்ப பிரசாரம் ரத்தோ..? இவனெல்லாம் முதல்வரானால் தலைமை செயலகத்துக்கு மாதத்தில் பாதி நாள் வர மாட்டான்.
எதோ ஒரு புலனாய்வு பாதுகாப்பு 100 பேரை வைத்திருக்கிறாராம் அவங்க வருமானத்துக்கு ஏதாவது பிலா விட்டிருப்பாங்க.
இது மாதிரியே போயிட்டிருந்தா கடைசில கட்சியையே ரத்து செய்ய வேண்டியிருக்கும்
நடிகனை நம்பி பின் செல்லும் கூட்டம் சொந்த புத்தி இல்லாத கூட்டம். அயல் நாட்டில் ஒரு கதைய்ய உண்டு. ஓர் ஊரில் எலிகள் தொல்லை கள் அதிகம். அவன்னைய்ய ஊர் மக்கள் கூடி தீர்வு காண ஒரு மந்திர வாதியாய்ய்ய கூப்பிட்டு எலி பிரச்னைய்களை தீர்க்க அவன் கேட்க்கும் பணம் தருவதக்க கூறினார்கள்.
அவனும் புல்லாங்குழலால் ஊத எலிகள் கூட்டம் அவன் பின்னே குன்று மேலேயே சென்று பிறகு கிளே ஒரு ஏரியில் விழுந்து செத்தன.

இவன் பிரச்சாரம் செய்தால் செய்தியாக போடலாம் ரத்து செய்வது இயல்பான ஒன்று இதில் ஆச்சர்யமே எதுவும் இல்லை அரசியலுக்கு ஒர்த்தே இல்லாத ஆளு வீட்டுல வழக்கமாக விளையாடும் விளையாட்டை விளையாடலாம் அல்லது பொம்மைகளை வைத்து விளையாடு சீரியசான தேர்தல் நேரத்துல குறுக்க முறுக்கே வந்துகிட்டு காமெடி பண்றான்