அடிக்கடி சோர்வடையும் விஜய்: அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்
சென்னை: த.வெ.க., தலைவர் விஜய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதால், அவரின் தேர்தல் பிரசாரம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், 233 தொகுதிகளில் த.வெ.க., போட்டியிடுகிறது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில், விஜய் போட்டியிடுகிறார். அதன்படி, பெரம்பூர், திருச்சி கிழக்கு, கொளத்துார், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்துள்ளார்.
கடந்த 10ம் தேதி காரைக்குடியில் பிரசாரம் செய்ய, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் விஜய் சென்றார். அங்கிருந்து சாலை வழியாக, காரைக்குடி செல்ல தாமதமானதால், விஜய் பிரசாரத்தில் பேசவில்லை.
இந்நிலையில், விஜயின் நேற்றைய கடலுார் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இன்று நடக்கவிருந்த கும்மிடிப்பூண்டி பிரசாரமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, சென்னை வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடக்கவிருந்த விஜயின் பிரசாரமும், இதுபோல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று அவர் கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது; அதுவும் நேற்றிரவு வரை உறுதி செய்யப்படவில்லை.
த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கோடை காலம் என்பதால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒரு நாள் பிரசாரம் செய்தால், வெயிலின் தாக்கத்தால், விஜய் ரொம்பவே சோர்வாகி விடுகிறார். எனவேதான், மறுநாள் அவரால் பிரசாரம் செய்ய முடியவில்லை.
எனவே திருச்சி கிழக்கு, புதுச்சேரி, திருநெல்வேலியில் பிரசாரம் செய்து முடித்ததும், அடுத்து இரண்டு நாள் வரையில், வேறு எந்த பிரசாரத்துக்கும் விஜயால் செல்ல முடியவில்லை. எனவேதான், மூன்று நாள்களுக்கு ஒருமுறை விஜய் பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், 10ம் தேதி காரைக்குடி சென்று திரும்பும்போது, விஜய் ரொம்பவே தளர்ந்து விட்டார். நீண்ட காலமாக நடிகராக இருந்தாலும், கோடை வெயிலில் விஜய் வெளியே வந்தது இல்லை. கட்சி துவங்கிய பின், மூன்று ஆண்டுகளில், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, உடலை பழக்கியிருந்தால், தேர்தல் சமயத்தில் அது கைகொடுத்திருக்கும்.
முதல்முறையாக வெயிலில் அலைவதால் உடலில் நீர்சத்து குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி, தலைசுற்றல் கூட அவருக்கு ஏற்படுகிறது.
அதேபோல், வெளி மாவட்டங்களில் பிரசாரம் நடந்தாலும், காலையில் தனது சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்துதான் விஜய் கிளம்புகிறார். மீண்டும் மாலையில், வீட்டுக்கு வந்து விடுகிறார். வெளியில் எங்கும் தங்குவதில்லை. தொடர்ச்சியான விமான பயணம், பிரசாரம், 'ரோடு ஷோ' செய்வதால், விஜய் ரொம்பவே சோர்ந்து விடுகிறார்.
விஜயின் உடல்நலம் சரியில்லாததால்தான் கடலுார், கும்மிடிப்பூண்டி என, த.வெ.க., பிரசாரம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையில், 'கடந்த சில ஆண்டுகளாக, 'டைப் 2 டயாபட்டிக்ஸ்' எனும் சர்க்கரை நோயால் விஜய் பாதிக்கப்பட்டு உள்ளதால், அடிக்கடி இடதுகால் பாதம் மரத்து போகிறது; உடல் சோர்வும் அதிகமாக உள்ளது. ஒரு நாள் பிரசாரம் செய்தால், அடுத்த நாள் ஓய்வெடுக்க வேண்டிய அளவிற்கு, அவர் உடல் நிலை உள்ளது' என, த.வெ.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
பணம் அதிக அளவு வரும் போது சில தீய பழக்க வழக்கங்களும் வருகிறது. டயபெடீஸுடன் குடியும் சேர்ந்து கொண்டால் அது மனிதனை பெரிய அளவில் பாதிக்கிறது. நல்ல சாப்பிட்டால், குடியால் பாதிப்பு வராது என்று மக்களிடம் தவறான கருத்து உள்ளது. ஏற்கனவே ஒரு சினிமா அரசியல் தலைவர் இதனால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது நடந்தது.
அவர் அடிக்கடி சோர்வடைவது அவரை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்குத்தானே நன்மை தரும். இதைப்பற்றி விஜய்யே கவலைப்படவில்லை.
நம்பி பின்னாடி போனவனுங்களெல்லாம் என்ன கதி ஆகப் போறாங்களோ....தேர்தல் முடிவுகள் வந்தபிறகு. பாவம்... அவர்களுக்காக நான் ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்.
இவன் ஆட்சிக்கு வந்தால் ,சில தோலோடு சுளை முழுங்கிகள் ,தமிழ் நாட்டை கபளீகரம் பண்ணி விடுவார்கள் .

57 வருஷமா நிரந்தர ஏழைகளின் பசி வறுமை கடன் ஏழ்மை தெரியாமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் சினிமா நடிகர்கள் தேர்தலில் நிற்க கூடாது