Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தல் தோல்விக்கான காரணம்: தி.மு.க.,வில் விசாரணை தொடக்கம்

தேர்தல் தோல்விக்கான காரணம்: தி.மு.க.,வில் விசாரணை தொடக்கம்

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக, தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வு குழுவினர், தாங்கள் தயாரித்து வைத்துள்ள 14 கேள்விகளுடன் விசாரணையை தொடங்கினர்.


இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., சந்தித்த தோல்விக்கான காரணங்களை அறிய, 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்த, 36 பேர் கொண்ட குழுவை கட்சித் தலைவர் ஸ்டாலின் நியமித்தார்.
இக்குழுவினர் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் நேரில் சென்று, நேற்று ஆய்வு பணிகளை தொடங்கினர். இவர்கள், தி.மு.க., தொண்டர்களின் உண்மையான கருத்துகளையும், தோல்விக்கான காரணங்களையும் சேகரித்து திரட்டி வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் காணப்பட்ட குறைபாடு, உட்கட்சி பிரச்னை, மக்கள் என்ன நினைக்கின்றனர், ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுடன் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இக்குழுவினர் விசாரணை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் என யாரும் உடன் இருக்கக்கூடாது என, கட்சி தலைமை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

ஒரு தொகுதிக்கு செல்லும் இரண்டு பேரும் இணைந்தே, அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஆய்வு முடிந்த பின், தொகுதியின் அறிக்கையை அன்றைய தினமே நிறைவு செய்து, கள ஆய்வு குழுவில் உள்ள இருவரும் தனித்தனியாக தர உள்ளனர்.

கள ஆய்வில் சேகரித்த விபரங்கள் அனைத்தையும், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் அறிக்கையாக தயாரிக்கும் ஆய்வு குழுவினர், அதை தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க உள்ளனர்.

கள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கட்சியில் தீவிர மறுசீரமைப்பு மற்றும் அதிரடி மாற்றங்களை எடுக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மே 19, 2026 03:13 pm

இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் ஆனாலும் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது!

Reply Rate this

2 காரணம். 1 திமுகவின் எல்லையற்ற வாய்கொழுப்பு திமிர், 2 மக்களை பணத்திற்கு அலையும் நாய்களாக நினைத்து வாரி இறைத்தது. இவ்வளவு பணம் திமுகவிற்கு எப்படி கிடைத்தது என்று களவாணிகளை அடிமட்ட மக்கள் புரிந்து கொண்டனர். திருடன் எவ்வளவு யோக்கியன் வேஷம் போட்டாலும் மக்களிடம் நம்பிக்கை வராது.

Reply Rate this
மே 19, 2026 12:50 pm

ENNA THALA. CHINNA KUZHANDHAIKKU KOODA THERIUM. UNGAL 5 VARUDA SAADHANAI TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI PAALIYAL KODUMAI URUTTU THARPERUMAI PHOTO SHOOT SANAADHANA HINDHU VIRODHA DRAVIDA MODEL MAFIA KUMBAL ENDRU. NEENGA PUDUNGINA AANI PODHUM. REST EDUNGA.

Reply Rate this
மே 19, 2026 10:04 am

திமுகவில் இரண்டு கோடியும் அதிமுகவில் ஒன்றரை கோடியும் உறுப்பினர்கள் இருப்பதாக இரண்டு கட்சிகளும் கூறுகின்றன. இது உண்மையாக இருந்தால்- அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கூட அவர்களின் கட்சிக்கு உண்மையிலே வாக்கு அளித்திருந்தால்- நூறு சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருக்கும் என்பதோடு தவெகவில் போட்டியிட்ட எவரும் டெபாசிட் கூட வாங்கியியிருக்க மாட்டார்கள்.

Reply Rate this
மே 19, 2026 09:51 am

திமுக. ...இனி பழனிக்கே காவடி எடுத்தாலும்....தோல்விதான்....திபாவளி பொங்கல் வாழ்த்து இல்லை ....அப்பரம் எப்படி

Reply Rate this

திமுக தோல்விக்கு காரணம்.... அப்பனும் மகனும் தான்.... கை புண்ணுக்கு எதுக்கு கண்ணாடி.... அவர்கள் இரண்டு பேரும் தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.... இரு‌ந்தாலு‌ம் அவர்கள் இரண்டு பேரையும் கட்சியை விட்டு நீக்கி விடுவார்களா என்ன ? எதுக்கு இந்த நாடகம் ?.... வடிவேலு ஒரு படத்தில் கூறுவார்.... நீ தான் தைரியமான ஆள் ஆயிற்றே.... சொல்லு.... சொல்லு என்று.... காரணத்தை கேட்பவரிடம்.... தோல்விக்கு நீங்களும் உங்கள் மகனும் தான் காரணம் என்று எப்படி சொல்வார்ர்கள் ?

Reply Rate this
மே 19, 2026 08:08 am

விசாரணையை முதலில் உங்கள் மருமகன் சபரீசனிடமிருந்து ஆரம்பியுங்கள்.

Reply Rate this
மே 19, 2026 07:16 am

தோல்விக்கான காரணம் உன் குடும்ப கொள்ளையும் இந்துக்கள் எதிர்ப்பு மட்டுமே.

Reply Rate this
மே 19, 2026 07:01 am

நிறைய மாற்றங்கள் தேவையில்லை! ஒரே ஒரு டோப்பா அப்பா மாறினால் போதும்! மாற்றினால் போதும்! இப்போது செய்யும் தொகுதி ஆய்வு வேலையற்ற.......... வேலை!

Reply Rate this
மே 19, 2026 06:52 am

ஆகா ஓஹோ.. திருட்டு திராவிடன் ஓங்கோல் கோவால் புரா கொள்ளையன் சோனமுத்தன் என்கிற சுடலைக்கு கொளத்தூர் மக்கள் செருகிய ஆப்பு அவனை கதற செய்வது எனக்கு பிடித்து இருக்கிறது.... நன்றி எம் தமிழ் மக்கா....

Reply Rate this