ஆட்சி மாற்றம் அவசியம் தேவை!
க.மணிகண்டன், 27 ஆசூர், பெரம்பலுார்
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். காரணம் கஞ்சா, போதைப் பொருட்களால் நடைபெற்று வரும் கொடூர கொலைகள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. வாக்குறுதியில் தெரிவித்தபடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த முடியவில்லை. வெளிநாட்டு முதலீட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கி விட்டதாக சொல்கின்றனர். ஆனால், அப்படி நடந்ததா என தெரியவில்லை.
தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., எவ்வளவோ தேவலாம். த.வெ.க., விஜய் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை.
விவரம் தெரியாத இளைஞர்கள் தான் அவர் பக்கம் அதிகம் உள்ளனர். தேர்தலுக்குப் பின் மீண்டும் அவர் சினிமா துறைக்கு செல்வது உறுதி.
ஆட்சி மாற்றம் நடந்தால் ஒழிய, சிறந்த ஆட்சி உருவாக வாய்ப்பில்லை. அடுத்த ஆட்சி அமைப்போர், கடந்தகால ஆட்சியின் நிறைகுறைகளை கண்டறிந்தால் தான், சீரான ஆட்சியை தர முடியும். அதற்கு, தே.ஜ., கூட்டணியின் -அ.தி.மு.க.,ஆட்சி அமைய வேண்டும். பழனிசாமிக்கு தான் என் ஓட்டு.
Advertisement

Nice